“தமிழ்நாடு அரசு உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்”: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மீண்டும் உச்சம் பெரும் வகையில் மின்கட்டண உயர்வினை திரும்ப பெற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் சுமார் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து வருவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

இந்நிலையில் மின்சார நிலை கட்டிடம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தற்போது பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளதாக பழனிசாமி தெரிவித்துள்ளார். இதன் காரணமாக சுமார் 25 விழுக்காடு தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையை போக்க மின்கட்டண உயர்வினை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள எடப்பாடி பழனிசாமி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மீண்டும் உயர்வு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

The post “தமிழ்நாடு அரசு உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்”: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: