இதுகுறித்த புகாரின்பேரில், வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர். இதில், வழிபறியில் ஈடுபட்டவர் கோவூர் பகுதியைச் சேர்ந்த யாக்கோபு (28) என்பது தெரியவந்தது. இதனையடுத்து நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கத்தி ஒன்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். யாக்கோபு மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
The post வாலிபர்களை கத்தியால் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டவர் கைது appeared first on Dinakaran.