பெங்களூரு: காவிரி விவகாரத்தில் பாஜக, ம.ஜ.த. கட்சிகள் அரசியல் செய்வதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டியுள்ளார். நிலம், நீர், மொழி பிரச்னையை அரசியல் ஆதாயத்திற்காக அரசியலாக்கக் கூடாது. விவசாயிகள், மாநில நலன்களை பாதுகாப்பதில் கர்நாடக அரசு ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்று அவர் கூறினார்.