திருவண்ணாமலை செப்.26: திருவண்ணாமலையில் மது போதையில் தகராறு செய்தவர்களை தடுத்த கவுன்சிலருக்கு கத்தி வெட்டு விழுந்தது. திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(40). ஒன்றிய கவுன்சிலர். இவர், நேற்று இரவு திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு மெக்கானிக் கடையில் உட்கார்ந்திருந்தார். அப்போது, அங்கு வந்து இரண்டு வாலிபர்கள் மதுபோதையில் தகராறு செய்தனர். அதனை, கவுன்சிலர் முருகன் தட்டி கேட்டதாக கூறப்படுகிறது. அதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர்கள் முருகனை கத்தியால் விட்டுவிட்டு அங்கிருந்து பைக்கில் தப்பினர். காயமடைந்த முருகன் திருவண்ணாமலை அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விரைந்துச் சென்று விசாரணை நடத்தினர். பைக்கில் தப்பிய மர்ம நபர்கள் தேடி வருகின்றனர்.
The post மதுபோதையில் தகராறு தட்டிக் கேட்ட கவுன்சிலருக்கு கத்தி வெட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வேலை திருவண்ணாமலை அருகே appeared first on Dinakaran.