8 நாட்கள் தாமதமாக விடைபெற தொடங்கியது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் கேரளாவில் தொடங்குவது வழக்கமாகும். இந்தாண்டு, ஜூன் மாதத்தில் நாட்டில் போதிய மழை பெய்யவில்லை. ஜூலையில் அதிகமான மழைப் பொழிவு இருந்தது. ஆகஸ்ட்டில் மீண்டும் பெய்த்துவிட, இந்த மாதம் நல்ல மழை பெய்துள்ளது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை விடைபெற தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்ட அறிக்கையில், “தென்மேற்கு பருவமழை தென்மேற்கு ராஜஸ்தானின் சில பகுதிகளில் இருந்து செப்டம்பர் 17ம் தேதி விடைபெற தொடங்கி அக்டோபர் 15ம் தேதிக்குள் முழுமையாக விடைபெற்றுவிடும். இந்நிலையில், இந்தாண்டு வழக்கத்துக்கு மாறாக, தென்மேற்கு பருவமழை செப்டம்பர் 25ம் தேதி, அதாவது 8 நாட்களுக்கு பிறகு விடைபெற தொடங்கி உள்ளது.

நாடு முழுவதும் இந்தாண்டு இதுவரை சராசரியாக 796.4 மி.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பான 843.2 மி.மீ உடன் ஒப்பிடும்போது, 6% குறைவாகும்,” என்று கூறப்பட்டுள்ளது.

The post 8 நாட்கள் தாமதமாக விடைபெற தொடங்கியது தென்மேற்கு பருவமழை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: