முன்னதாக நடைபெற்ற 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் தொடர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கற்பக விநாயகா பொறியியல் கல்லூரி முதல்வர் காசிநாத பாண்டியன் பரிசுகளை வழங்கினார். இதனை தொடர்ந்து, மாணவ – மாணவியரின் பரத நாட்டியம், மேற்கத்திய நடனம், யோகா, கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில், வண்ணமயமான உடை அணிந்து மாணவ, மாணவிகள் பங்கேற்று பார்வையாளர்களை அசத்தினர். இதில், அனைத்து நிகழ்ச்சிகளையும் பள்ளி மாணவ, மாணவியர் தொகுத்து வழங்கினர். இறுதியாக கற்பக விநாயகர் குளோபல் பள்ளி மாணவி தாரா மெரிபா நன்றி கூறினர்.
The post கற்பக விநாயகா குளோபல் பள்ளியில் விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.