தொடர்ந்து ஒரு வாரமாக கொடைக்கானலில் மழை பெய்து வருவதால் அங்கிருக்கும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். அவ்வப்போது பெய்து வரும் சாரல் மழை கொடைக்கானலை ஜில்லென்று வைத்துள்ளது. இந்த சீதோஷண நிலையை சுற்றுலாப்பயணிகள் வெகுவாக ரசித்து வருகின்றனர். மேலும் முக்கிய சுற்றுலாத்தலங்களான மோயர் பாய்ண்ட், குணா குகை, பைன் பாரஸ்ட் நட்சத்திர ஏரி ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
The post சாரல் மழையுடன் ‘ஜில் கிளைமேட்’-கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் appeared first on Dinakaran.