காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாக இருக்கும்

நாமக்கல், செப்.24: நாமக்கல் பகுதியில், காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கை விபரம்:நாமக்கல் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில், 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று (24ம் தேதி) 6 மிமீ, 25ம் தேதி 10 மிமீ, 26ம் தேதி 14 மிமீ, 27ம் தேதி 15 மில்லிமீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலை அதிகபட்சமாக 89.6 டிகிரி, குறைந்தபட்சம் 68 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 90 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும் இருக்கும். கடந்த வாரம் இறந்த கோழிகள், இறக்கை அழுகல் நோயால் பாதிக்கப்பட்டு இறந்தது, கோழியின நோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே, பண்ணையாளர்கள் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தில் நுண்ணுயிர் கிருமிகளின் தாக்கம் உள்ளதா? என்பதை பரிசோதித்து, அதற்கேற்ப தீவன மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். இவ்வாறு வானிலை ஆலோசனை மையம் தெரிவித்துள்ளது.

The post காற்றின் ஈரப்பதம் 90 சதவீதமாக இருக்கும் appeared first on Dinakaran.

Related Stories: