இந்த புதிய வந்தே பாரத் ரயில்கள், நெல்லை மதுரை சென்னை வழித்தடத்திலும், உதய்பூர்- ஜெய்ப்பூர், ஐதராபாத் பெங்களூரு, விஜயவாடா சென்னை (ரேணிகுண்டா வழியாக), பாட்னா ஹவுரா, காசர்கோடு திருவனந்தபுரம், ரூர்கேலா புவனேஸ்வர்-பூரி, ராஞ்சி ஹவுரா, ஜாம்நகர் அகமதாபாத் ஆகிய 9 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. இந்த புதிய ரயில் சேவை மூலம் நெல்லை-சென்னை இடையேயான பயண நேரத்தில் 2 மணி நேரமும், ஐதராபாத் பெங்களூரு இடையேயான பயண நேரத்தில் இரண்டரை மணி நேரமும் குறையும்.
* வந்தே பாரத் ரயிலில் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சாதாரண ஏசி சேர் கார் கட்டணம் ரூ.1610 (உணவு, ஜிஎஸ்டி உட்பட) ஆகவும், எக்ஸிகியூடிவ் சேர் கார் கட்டணம் ரூ.3005 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* நெல்லை-சென்னை இடையேயான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
The post சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரயில்கள் சேவை: பிரதமர் மோடி இன்று துவக்கம் appeared first on Dinakaran.