பிறந்து 40 நாட்களான குழந்தையை 14வது மாடியில் இருந்து வீசி கொன்ற தாய்


மும்பை: பிறந்து 40 நாட்களே ஆன குழந்தையை 14வது மாடியில் இருந்து தூக்கி வீசிக் கொன்ற தாய் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் முலுண்ட் பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், 14வது மாடியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து 40 நாட்களே ஆன தனது மகளை, அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனிக்கு எடுத்து சென்ற தாய், திடீரென குழந்தையை அங்கிருந்து கீழே வீசினார். அதை பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தனது குழந்தையை கொன்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்தனர். எனினும் அந்த பெண் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட பெண்ணால் பேசவும், கேட்கவும் முடியாது. மேலும் அவரது உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார் என்பதால், எதற்காக தனது குழந்தையை 14வது மாடியில் இருந்து தூக்கி வீசினார் என்பது குறித்து அறிய முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

The post பிறந்து 40 நாட்களான குழந்தையை 14வது மாடியில் இருந்து வீசி கொன்ற தாய் appeared first on Dinakaran.

Related Stories: