தீவிரவாதிகளுடன் தொடர்பு : சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்


திருவனந்தபுரம்: கேரள காவல்துறையில் பணிபுரியும் சிலர் தடை செய்யப்பட்ட சில தீவிரவாத குழுவினருடன் தொடர்பு வைத்திருப்பது மத்திய உளவுத்துறைக்கு சமீபத்தில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை ரகசியமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க கேரள அரசுக்கு மத்திய உள்துறை உத்தரவிட்டது. இதன்படி இடுக்கி, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்த 4 போலீசார் தீவிரவாத இயங்கங்களுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் சமீபத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னையில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நடத்திய அதிரடி சோதனையில் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஐஎஸ் இயக்கத்திற்கு நிதி திரட்டுவதற்காக கேரளாவிலுள்ள முக்கிய கோயில்களில் கொள்ளையடிக்கவும், சில மத தலைவர்களை கொல்லவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதற்கு கோட்டயம் சைபர் செல் பிரிவு எஸ்.ஐ. ரிஜுமோன் உடந்தை என்பதும் தெரியவந்தது. இவர் போலீசின் சில முக்கிய விவரங்களை உடனுக்குடன் ஐஎஸ் இயக்கத்தினருக்கு பரிமாறி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து முதற்கட்ட நடவடிக்கையாக எஸ்.ஐ. ரிஜுமோனை சஸ்பெண்ட் செய்து எர்ணாகுளம் சரக டிஐஜி உத்திரவிட்டுள்ளார். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் எனக் கூறப்படுகிறது.

The post தீவிரவாதிகளுடன் தொடர்பு : சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: