அகமதாபாத், மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ள தொடக்க போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் கைகலக்கின்றன. இந்த நிலையில், உலக கோப்பையை வெல்லும் அணிக்கு ரொக்கப் பரிசாக ரூ.33.24 கோடி வழங்கப்படும் என ஐசிசி நேற்று அறிவித்துள்ளது. பைனலில் தோற்று 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.16 கோடி கிடைக்கும். அரையிறுதியில் தோற்று வெளியேறும் 2 அணிகளுக்கு தலா ரூ.6.65 கோடி வழங்கப்படும். லீக் சுற்றுடன் மூட்டையை கட்டும் 6 அணிகளுக்கும் கணிசமான தொகை கிடைக்கும். இந்த தொடரின் மொத்த பரிசுத் தொகை ரூ.83.10 கோடியாகும்.
The post உலக சாம்பியனுக்கு ரூ.33 கோடி ரொக்கப் பரிசு: ஐசிசி அறிவிப்பு appeared first on Dinakaran.
