அவசர மற்றும் தீவிர சிகிச்சையின் பொருட்டு அவர்களின் மொத்த கையிருப்பு பணமும் செலவழிந்த நிலையில் மேல் சிகிச்சை செய்திட தமிழ்நாடு கொண்டு வர மருத்துவரிடம் ஆலோசனை பெறப்பட்ட நிலையில் குழந்தை சந்தியாவிற்கு கடுமையான சுவாச பிரச்னை இருப்பதால், மருத்துவ குழுவின் கண்காணிப்பில், சுவாச கருவிகளுடன் விமானத்தில் பயணம் மேற்கொள்ள மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது. இஸ்தான்புல் நகரில் இருந்து மருத்துவ வசதிகளுடன் குழந்தை சந்தியாவை தமிழ்நாடு அழைத்து வர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றோர் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையினை தாயுள்ளத்தோடு பரிசீலனை செய்து முதல்வர், சந்தியாவினை மேல்சிகிச்சைக்கு சென்னைக்கு அழைத்து வர ரூ.10 லட்சம் அளித்து உத்தரவிட்டுள்ளார். தற்போது அயலகத் தமிழர் நலத்துறை வாயிலாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சென்னை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post உடல்நலக்குறைவால் துருக்கியில் சிகிச்சை பெற்றுவரும் 2 வயது குழந்தையை ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டுவர ரூ.10 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.