தொடர்ந்து அங்கு வந்த பணிப்பெண்கள், அவரை வேறு இருக்கைக்கு மாற்றி அமர வைத்தனர். இந்த நிலையில், விமானம் அகர்தலா விமான நிலையத்தில் தரையிறங்கியதும் சம்பந்தப்பட்ட பயணி, விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தனது பெயர் பிஸ்வஜித் தேவ்நாத் என்றும் போதை மாத்திரைகளை உட்கொண்டு இருந்ததால் எமெர்ஜென்சி கதவை திறக்க முயன்றதாகவும் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே இந்த சம்பவத்தால் பயணிகளின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை என இண்டிகோ விமான நிலையம் தெரிவித்துள்ளது.
The post நடுவானில் விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறக்க முயன்ற பயணியை திரிபுரா மாநில போலீசார் கைது appeared first on Dinakaran.