ஆலையில் மோட்டார் திருடிய 2 பேர் கைது

சேந்தமங்கலம், செப்.22: புதுச்சத்திரம் அடுத்துள்ள பிள்ளாநல்லூர் மலைக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (67). சேகோ தொழிற்சாலை அதிபர். இவரது விவசாய தோட்டத்திற்கு, கொல்லிமலை ஒன்றியம் பைல்நாடு புங்கம் பட்டியை சேர்ந்த மீனாட்சி(37), சக்திவேல்(27) ஆகியோர் விவசாய கூலி வேலை செய்வதற்காக வந்திருந்தனர். நேற்று முன்தினம், வேலை முடிந்து சென்று விட்டனர். சண்முகம் சேகோ தொழிற்சாலை குடோனில் சென்று பார்த்த போது, அங்கு இருந்த மின்மோட்டார் ஒன்று காணவில்லை. இது குறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து, தொழிற்சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது மீனாட்சி, சக்திவேல் இருவரும் மின்மோட்டாரை திருடி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்து மின்மோட்டாரை பறிமுதல் செய்தனர்.

The post ஆலையில் மோட்டார் திருடிய 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: