பெண்களின் வளர்ச்சிக்கு 33% இடஒதுக்கீடு ஒரு மைல் கல்: ஜி.கே.வாசன் வரவேற்பு

சென்னை:  தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நாடாளுமன்றத்தில் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பாக மகளிருக்கு 33சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகமாக வழங்கும்போது சமூகத்திலும், அவர்களுக்கான அடிப்படை உரிமையும் அங்கீகாரமும் கிடைக்கிறது.

தற்பொழுது மகளிர்க்கான இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டதால், வருங்காலங்களில், நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மகளிர்க்கான பங்களிப்பு அதிகரிக்கும். எதிர்கட்சிகள் இந்த இட ஒதுக்கீட்டை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் மகளிருக்கு அளிக்கும் உரிமையை, அங்கீகாரத்தை, பகிர்ந்தளிக்கும் நிகழ்வாக பார்க்க வேண்டும், தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும். பெண்களுக்கான 33சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் என்றும் துணை நிற்கும்.

The post பெண்களின் வளர்ச்சிக்கு 33% இடஒதுக்கீடு ஒரு மைல் கல்: ஜி.கே.வாசன் வரவேற்பு appeared first on Dinakaran.

Related Stories: