ஞாயிறு காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் சுமார் 103 சீன போர் விமானங்கள் தைவானை நோக்கி சென்றுள்ளன. 40 விமானங்கள் இரு நாடுகளுக்கும் இடையயான பகுதியை கடந்த பின் திரும்பி சென்றதாக தைவான் பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 24 மணி நேரத்தில் 9 போர் கப்பல்களும் தைவானை சென்றடைந்துள்ளன. தினசரி இதுபோன்று பயிற்சிகளை சீனா மேற்கொண்டு வந்தாலும் தற்போது அதிகப்பட்ச எண்ணிக்கையிலான போர் விமானங்களை அனுப்பியுள்ளன. இது சீன ராணுவத்தின் நடவடிக்கை வெறும் அச்சுறுத்தல் அல்ல துன்புறுத்தல் என்று தைவான் தெரிவித்துள்ளது.
The post தைவானை நோக்கி 103 போர் விமானங்கள்: சீனா அச்சுறுத்தல் appeared first on Dinakaran.