இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. வாசன் போன்றோர் தேசிய நெடுஞ்சாலைகளில் ஸ்டண்ட் செய்கின்றேன் என்று கூறி பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக பைக் ஓட்டுவது மற்ற இளைஞர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், டிடிஎப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீசார், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பைக் ரைடராக யூடியூப் மூலம் பிரபலமான டிடிஎப் வாசன், மஞ்சள் வீரன் என்ற படத்தில் நடிப்பதாக கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியானது. கடந்த ஜூலை மாதம் சென்னை அமைந்தகரையில் டிடிஎப் வாசன் சென்ற கார், பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. தொடர்ந்து நேற்று முன்தினம் காஞ்சிபுரம் அருகே சாகசம் செய்ய முயன்று அவர் விபத்தில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தாறுமாறாக வண்டி ஓட்டி, வீலிங் செய்து விபத்து யூடியூபர் டிடிஎப் வாசன் படுகாயம்: போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.