கூட்டத்தில் முன்னாள் துணைமுதல்வர் அஷ்வத் நாராயண் பேசியபோது, தமிழ்நாட்டிற்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.`இந்தியா’ கூட்டணியில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக இடம் பெற்றுள்ளதால், அந்த கூட்டணிக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் தண்ணீர் திறந்துவிட்டு மாநில விவசாயிகளுக்கு துரோகம் செய்து வருகிறது. பாஜ விவசாய பிரிவு சார்பில் விவசாயிகள் நலனுக்காக பாஜ சார்பில் ‘காவிரி நதி பாதுகாப்பு யாத்திரை’ நடத்தப்படும்’ என்றார்.
The post தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து பாஜ யாத்திரை appeared first on Dinakaran.
