சிறையில் உள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கோரி 5ம் முறையாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சிபிஐ, ஜெயராஜின் மனைவி செல்வராணி தரப்பில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவின் மீது நேற்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.இளங்கோவன், ‘‘மனுதாரர் மீதான குற்றச்சாட்டின் தீவிரம் கருதி மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மதுரை நீதிமன்றம் விசாரணையை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளார்.
The post சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு தள்ளுபடி appeared first on Dinakaran.