ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்க நடவடிக்கை

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை வழங்கக்கோரி நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒரு கிலோ பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை 33 ரூபாய் 44 காசு என நிர்ணயம் செய்ய வேண்டும் என போராட்டம் நடக்கிறது. ஒரு கப் தேநீர் 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், இந்த தேநீருக்கு ஆதாரமாக விளங்கும் தேயிலை விவசாயிகளுக்கு 10 பைசா கூட கிடைப்பதில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

தமிழ்நாடு அரசு இதில் உடனடி கவனம் செலுத்தி பசுந்தேயிலைக்கான யதார்த்தமான குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்யவும், ஒன்றிய அரசிடம் இருந்து உரிய மானியத்தை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதார விலை தேயிலை விவசாயிகளுக்கு கிடைக்கவும், ஒன்றிய அரசிடம் இருந்து மானியத்தை பெற்றுத்தர முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை பசுந்தேயிலைக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: