அப்போது பட்டாசு தயாரிப்பில் பெரியன் என்ற வேதிப்பொருள் 22 முதல் 30 சதவீதம் வரை பயன்படுத்துவதால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தற்போது சுற்றுப்புற சூழலை பாதிக்காதவாறு பசுமை பட்டாசுகள் மட்டுமே தயாரிப்படுவதாக தெரிவித்தனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
The post நாடெங்கும் பட்டாசுகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.