திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 750 ஆண், பெண் சிலம்ப வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் சிலம்பம் அசோசியேஷன் ஆப் இந்தியா தலைவர் முகமது சிராஜ் அன்சாரி, செயலாளர் தியாகு நாகராஜ், தேசிய துணைத் தலைவர் எமராஜா, தேசிய தொழில்நுட்ப இயக்குனர் துரை, தேசிய மகளிர் அணி தலைவர் சங்கீதா போட்டிகளை துவக்கி கண்காணித்தனர்.
இதனை தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார் ஆகியோர் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர். மேலும், இந்த போட்டியில் திமுக நிர்வாகிகள் ராமஜெயம், செல்வசேகரன், ரமேஷ் அறிவழகன், ஆரம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தனசேகர், ஒன்றிய கவுன்சிலர் ரவக்கிளி ஜெயராமன், தொழிலதிபர்கள் வேல்முருகன், இளங்கோ பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தனர். முடிவில் திருவள்ளூர் மாவட்ட செல்வ கமிட்டி பொருளாளர் பாஸ்கர் நன்றி கூறினார்.
The post மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி: எம்எல்ஏ பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.