இதுகுறித்து சுங்க அதிகாரிகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்ற பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அந்த பாம்புக் குட்டிகளை ஆய்வு செய்தனர். அதில் மொத்தம் 15 பாம்பு குட்டிகளும், ஆப்பிரிக்காவில் காணப்படும் அரியவகை அணில் ஒன்றும் இருந்தது. அந்த பாம்பு குட்டிகள் அனைத்தும் பால் பைத்தான் எனப்படும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் என தெரியவந்தது. தொடர்ந்து ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார் அந்த கடத்தல் பயணியிடம் விசாரணை நடத்தினர். குட்டிகளாக குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கிறோம். இதன் மூலம் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும் என்பதால், அவ்றை அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுங்கத்துறைக்கு, ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு துறை போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்தனர். மேலும் இந்த 15 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், அரிய வகை அணிலையும் மீண்டும் நாளை (இன்று) வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும், தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் திருப்பி அனுப்பிவிட்டு, அதற்கான செலவுகளை கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
The post தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு, அணில் பறிமுதல்: திருப்பி அனுப்ப நடவடிக்கை appeared first on Dinakaran.