இந்நிலையில், இந்த வழக்கில் ஒன்றிய அரசின் அயல்நாட்டினர் பதிவு மண்டல அலுவலக அதிகாரி பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், விதிகளின்படி, தமிழக சிறையில் இருந்து விடுதலையாகும் வெளிநாட்டினர்களிடம் பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் இருக்கும் பட்சத்தில், அவர்கள் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவர். ஆனால் இந்த வழக்கில் யாரும் ஆவணத்துடன் வரவில்லை. கள்ளத்தோணி மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான பாஸ்போர்ட் மற்றும் பயண ஆவணங்கள் கேட்டு கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிற்கான இலங்கை துணை தூதகரத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் உள்ளிட்ட பயண ஆவணங்கள் கிடைத்தவுடன் இவர்கள்4 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
The post ராஜிவ் கொலை வழக்கில் விடுதலை முருகன் உள்ளிட்ட 4 பேர் இலங்கை செல்வார்கள்: ஐகோர்ட்டில் ஒன்றிய அரசு பதில் மனு appeared first on Dinakaran.