நுண்ணிய அணுக்கள் இணைந்தே நாம் காணும் உலகம் உருவானது என்பது அறிவியல் தேற்றம். இந்த அணுவுக்குள் 16 வகையான நுண்துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அவற்றுள் முக்கியமானவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை. இந்த அணுக்களுக்கு எடையை அளிக்கும் நுண்துகள் உள்ளது என்பதற்கான கோட்பாட்டை (போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்) கண்டறிந்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ். 2012ல் கண்டறியப்பட்ட அந்தப் புதிய துகளுக்கு ‘போஸான்’என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். உலகப்புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டு விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தவர் இவர்.ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாட்டை விளக்கி போஸ் எழுதிய கட்டுரையின் கணித அணுகுமுறை ஐன்ஸ்டீனை பெரிதும் கவர்ந்தது. அந்த முறையையே ஐன்ஸ்டீனும் பின்பற்றத் தொடங்கினார்.போஸுக்கு புகழ் பெற்றுத் தந்தது, நுண்துகள் புள்ளியியலில் (Quantum Statistics) அவர் 1924-25ல் அளித்த வரையறைக் கோட்பாடாகும். அதை பின்னாளில் ஐன்ஸ்டீன் மேலும் மேம்படுத்தினார். எனவே இது ‘போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்’(Bose-Einstein Statistics) என்று பெயர் பெற்றது.1925ல் ஜெர்மனியில் ஐன்ஸ்டீனும் போஸும் இணைந்து இயற்பியல் குளிர்விப்பு கருதுகோளை வெளியிட்டனர். அந்தக் கருதுகோள், ‘போஸ்- ஐன்ஸ்டீன் செறிபொருள்’(Bose-Einstein Condensate) என்று பெயர் பெற்றது. இவரது விஞ்ஞான சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு 1954ல் பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவித்தது.
The post சத்யேந்திரநாத் போஸ் : நுண்துகள் கோட்பாட்டைக் கண்டறிந்தவர் appeared first on Dinakaran.