இந்த நிலையில், வருமானத்துக்கு அதிகமாக 16.33% சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை வடபழனியில் உள்ள அவரின் வீடு உட்பட 18 இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.சென்னையில் 16 இடங்களிலும் கோவை, திருவள்ளூரில் தலா ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை 25 பக்கங்களில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. அதில், “2016 தேர்தலில் சத்யா போட்டியிட்ட போது ரூ.3.21 கோடி மதிப்பில் 21 அசையும் அசையா சொத்துக்கள் இருந்தன.2021 தேர்தலில் போட்டியிடும் போது சத்யாவிடம் ரூ.16.44 கோடி மதிப்பில் 38 சொத்துக்கள் அதிகரித்துள்ளது. சத்யா பல்வேறு முறைகளில் ரூ.11 கோடி சேமித்து வைத்துள்ளார்.சத்யாவின் செலவு விவரம் ர்.5.59 கோடியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யா, வருமானத்துக்கு அதிகமாக ரூ. 2.64 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக அவர் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது மனைவி, மகள்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள அதிமுக நிர்வாகி ஆர்.எஸ். ராஜேஷ் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. சத்யாவின் நெருங்கிய நண்பரான வடசென்னை வடகிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ராஜேஷ் வீட்டில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
The post ஆரம்பத்தில் சைக்கிள் கடை.. தற்போது ரூ.16 கோடி சொத்து: அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு!! appeared first on Dinakaran.