இந்த வழக்கில் வரும் அக்டோபர் 9ம் தேதி நேரில் ஆஜராக சி.வி.சண்முகத்துக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதேபோல் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் கடந்த மார்ச் 10ம் தேதி நடந்த அதிமுக நிகழ்ச்சியில் மாஜி அமைச்சர் சி.வி.சண்முகம் முதல்வர் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று மேலும் ஒரு அவதூறு வழக்கை அரசு வழக்கறிஞர் சுப்பிரமணியம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்தார். இந்த வழக்கிலும் அக்டோபர் 9ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
The post முதல்வர் குறித்து அவதூறு சி.வி.சண்முகம் மீது வழக்கு: அக்.9ம் தேதி ஆஜராக கோர்ட் ஆணை appeared first on Dinakaran.