லிபியா செம்பிறை சங்கம் நேற்று காலை வெளியிட்ட அறிக்கையின்படி டெர்னாவில் மட்டும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். டெர்னாவில், கட்டிட இடிபாடுகளில் சிக்கி 2,000க்கும் மேற்பட்டோர் இறந்திருக்க கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், துனிசியாவில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஜெனீவாவில் உள்ள ஐநா.வின் தலைமை அலுவலகத்துக்கு பேசிய சர்வதேச செஞ்சிலுவை மற்றும் செம்பிறை அமைப்பின் லிபியாவுக்கான தூதர் தமர் ரமடான், “இந்த வெள்ளப் பேரழிவில் சிக்கிய 10,000 பேரை காணவில்லை. டெர்னாவில் மட்டும், 700 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன,” என்று அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post டேனியல் புயல் லிபியாவை தாக்கியது வெள்ளத்தில் சிக்கிய 10,000 பேரை காணவில்லை: 700 சடலங்கள் மீட்பு appeared first on Dinakaran.