மேலும், ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அல்லது முதன்மை அலுவலகம் சென்னை மாநகரில் இல்லாமல் இருந்தாலும் முதல் ஆண்டிற்கு நிறுமம் வரி ரூ.75 செலுத்தப்பட வேண்டும். ஆனால் அந்நிறுவனத்தின் மொத்த வருமானம் அந்த ஆண்டில் ரூ.5000க்கு மிகையாக இருப்பதாக கண்டறியப்பட்டால் அந்நிறுனம் அட்டணையில் குறிப்பிடப்பட்ட விகிதத்தின் படி முதலில் செலுத்திய ரூ.75ஐ கழித்து மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். எனவே, உயர்த்தப்பட்டுள்ள நிறும வரி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால் 30 நாட்களுக்குள் ரிப்பன் கட்டிடத்தில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருத்திய நிறும வரி
முதலீடு தொகை உயர்த்தபடவுள்ள அரையாண்டு நிறும வரி
1,00,000-1,99,999 ரூ.300
2,00,000-2,99,999 ரூ.600
3,00,000-4,99,999 ரூ.1200
5,00,000-9,99,999 ரூ.1500
10,00,000-அதற்கு மேல் ரூ.3000
The post தொழில் நிறுவனங்களுக்கான நிறும வரியை உயர்த்த மாநகராட்சி முடிவு: அறிவிப்பாணை வெளியீடு appeared first on Dinakaran.