I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது!

டெல்லி: I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது. தேர்தல் வியூகம் தொடர்பாக பிரச்சாரக் குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது. சென்னை உட்பட 11 இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட உள்ளது. கூட்டத்தில் மாநிலங்களவை திமுக குழு தலைவர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் பரப்புரைக் குழுவின் கூட்டம் இன்றும், ஒருங்கிணைப்பு கூட்டம் நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ், திமுக உள்ளிட்ட காட்சிகள் ஒருங்கிணைந்து, இந்தியா கூட்டணியை அமைத்துள்ளான. இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவிலும், 2வது கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூரிலும், 3 வது கூட்டம் மாடடிய தலைநகர் மும்பையிலும் நடைபெற்றது.

இந்தியா கூட்டணி சார்பில் இது வரை 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பரப்புரைக் குழுவின் முதல் கூட்டம் செப். 6-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. பரப்புரைக் குழுவின் 2வது கூட்டம் இன்று காலை 11 மணிக்கு காணொளி காட்சிகள் மூலம் தொடங்கியது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குர்திப் சிங் சப்பால், திருச்சி சிவா, தொல்.திருமாவளவன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் சஞ்சய் யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தியா கூட்டணி சார்பில் டெல்லி, பட்னா, சென்னை, நாக்பூர், குவஹாத்தியில் இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதை எடுத்து இந்தியா ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் நாளை டெல்லியில் சரத்பவார் வீட்டில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் டி.ஆர்.பாலு, காங்கிரசை சேர்ந்த கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட 14 பேர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ‘இந்தியா விஷன் டாக்குமெண்ட்’ எனப்படும் தொலைநோக்கு அறிக்கை’ தயாரிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி இந்தியா’ கூட்டணியின் தொலைநோக்கு அறிக்கை’யை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

 

The post I.N.D.I.A கூட்டணியின் பிரச்சாரக்குழு கூட்டம் காணொலிக்காட்சி மூலம் தொடங்கியது! appeared first on Dinakaran.

Related Stories: