இதில் 2 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் பல இடங்களில் குறைந்தது 6 ஆயிரம் பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய தரைக்கடல் எல்லையில் அமைந்துள்ள லிபியாவில் டேனியல் புயல் ஏற்படுத்தி உள்ள அதிபயங்கர பாதிப்பு காரணமாக அந்த நகரங்கள் அனைத்தும் பேரழிவு உள்ள இடங்களாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 ஆயிரம் பேரின் கதி என்ன ஆனது என்று தெரியாததால் உலக நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. லிபியாவில் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்பான கூடுதல் தகவல்கள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை.
The post லிபியாவில் டேனியல் புயலின் கோரத்தாண்டவத்தால் 2 ஆயிரம் பலி.. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 ஆயிரம் பேரின் கதி என்ன ? appeared first on Dinakaran.