தங்கள் வேண்டுதலுக்கான விண்ணப்ப குறிப்புகளை கடவுள் படித்தறிந்து நிறைவேற்றுவார் என்பது யூதர்களின் நம்பிக்கையாகும். குறிப்பாக நாட்டின் அமைதிக்காக வேண்டி யூதர்களின் குறிப்புகளை எழுதி சுவரின் பிளவுகளில் செருகி விட்டு செல்வர். மற்ற யூதர்களும் வேண்டுதல் குறிப்பை எழுதிவைக்க வசதியாக ஆண்டுக்கு இரண்டு முறை இந்த சுவர் சுத்தம் செய்யப்படுகிறது. அந்த வகையில் யூதர்களின் புத்தாண்டை முன்னிட்டு மேற்குச்சுவரை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. சேகரிக்கப்படும் வேண்டுதல் குறிப்பு தாள்கள் ஒரு அறையில் பாதுகாக்கப்படும். பின்னர் சிறப்பு நிகழ்வு ஒன்றில் அவை அனைத்தும் புதைக்கப்படும்.
The post யூதர்களின் புத்தாண்டை ஒட்டி ஜெருசலேம் நகரில் உள்ள மேற்குச்சுவரில் வைக்கும் வேண்டுதல் குறிப்புத் தாள் சேகரிக்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.