வேலாயுதம்பாளையம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

 

வேலாயுதம்பாளையம், செப்.11: கரூர் மாவட்டம் சேலம்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மூலிமங்கலம் பிரிவு அருகே அரசு அனுமதியின்றி அரசு மது பாட்டில்களை வைத்துக்கொண்டு திருட்டுத்தனமாக ஒருவர் விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர்.

அங்கு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அடுத்த ஆர்.எஸ்.மங்கலம் பகுதியைச் சேர்ந்த வினோத் (27) என்பவர் அரசு மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து வினோத்தை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலாயுதம்பாளையம் அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: