சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பயணி தனசேகரன் (38) கீழே இறங்காமல், இருக்கையிலேயே தலை சாய்த்து தூங்குவது போல் அமர்ந்திருந்தார். அவரை விமான பணிப்பெண்கள் தட்டி எழுப்பியும் எழுந்திருக்கவில்லை.சென்னை விமானநிலைய மருத்துவ குழுவினர் தனசேகரனை சோதனை செய்தனர்.அவர் திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பினால் இறந்துபோனதாக டாக்டர்கள் அறிவித்தனர். சிவகங்கையில் உள்ள தனசேகரனின் குடும்பத்தினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
The post மஸ்கட்டிலிருந்து சென்னை வந்த விமானத்தில் தமிழக பயணி மாரடைப்பால் பலி appeared first on Dinakaran.