கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்னம், பசுபதி, ஜூனியர் பாலையா, லதா சேதுபதி, விக்னேஷ், சோனியா, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம் குமார் உள்பட முன்னணி நடிகர், நடிகைகள் மற்றும் ஏராளமான நாடக கலைஞர்கள் கலந்துகொண்டனர். சங்க வளர்ச்சிப் பணிகள், புதிய கட்டிடப் பணிகள் உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக செயற்குழு கூட்டம் காலை 9 மணிக்கு நடந்தது. இதில் 23 செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். துணைத்தலைவர் பூச்சி எஸ்.முருகன் நன்றி கூறினார். நடிகர் சங்க புதிய கட்டிட நிதிக்காக கலை நிகழ்ச்சிகள் நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விஷால் கூறுகையில், ‘தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டி முடித்த பிறகு எனது திருமணம் நடக்கும்’ என்றார்.
The post புதிய நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.40 கோடி கடன் வாங்க முடிவு: இன்று நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் appeared first on Dinakaran.