இதில் ஜி20 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஒரேபூமி என்ற தலைப்பிலும், ஒரே குடும்பம் என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெறுகிறது
இன்று இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஜி20 மாநாடு தலைவர்கள், அனைவரும் டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றனர். அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
அப்போது மகாத்மா காந்திக்கு பிடித்தமான பாடல் ஒலிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து ஜி20 நாடுகளின் தலைவர்கள் பிரகதி மைதானத்தில் மரம் நாட உள்ளனர். இதனை தொடர்ந்து இன்று பிரதமர் மோடி ஜி20 நாட்டு தலைவர்கள் உடன் தனித்தனியாக ஆலோசனை நடத்த உள்ளார்.
The post டெல்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் மரியாதை appeared first on Dinakaran.
