மதுரை: சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட நாட்களில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றம் நாள்தோறும் விசாரிக்கலாம் அல்லது விசாரணை நாட்களை அதிகரிக்கலாம் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது. சாத்தான்குளம் வழக்கில் பக்கத்து கடைக்காரர் பிரபு புதிய சாட்சியமாக இணைக்கப்பட்டுள்ளார் என்றும் சிபிஐ கூறியுள்ளது.
The post சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட நாட்களில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.
