பள்ளிபாளையத்திற்கு குடிநீர் விநியோகம்

பள்ளிபாளையம், செப்.8: பூலாம்பட்டி குடிநீர் திட்டத்தில் பள்ளிபாளையம் நகராட்சி பகுதிக்கும் குடிநீர் வழங்கக்கோரி, குடிநீர் வடிகால்துறை மேலாண்மை இயக்குனரிடம் நகர மன்ற தலைவர் மனு அளித்தார். பூலாம்பட்டி குடிநீர் திட்டம் மூலம், காவிரி ஆற்றிலிருந்து நீர் எடுத்து திருச்செங்கோடு, பள்ளிபாளையம் கிராமப்பகுதிகளில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கும் திட்ட சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் இந்த திட்டத்தில், பள்ளிபாளையம் நகராட்சி மக்களுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது நகராட்சி பகுதியில் உள்ளவர்களுக்கு தினம் 110 லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில், பள்ளிபாளையம் நகரமன்ற தலைவர் செல்வராஜ் ஆகியோர் சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்துறை மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தியை நேரில் சந்தித்து பேசினர். கூடுதல் குடிநீர் கிடைக்கும் வகையில் பூலாம்பட்டி குடிநீர் திட்டத்தில் பள்ளிபாளையம் நகராட்சி பகுதியையும் இணைத்து குடிநீர் வழங்க வேண்டுமென கோரி மனு அளித்தனர்.

The post பள்ளிபாளையத்திற்கு குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: