இதன் விளைவாக 2019 தேர்தலுக்கு முன்னதாக, அரசின் கவர்ச்சிகர திட்டங்களின் செலவினங்களுக்காக 2018-ம் ஆண்டில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து கூடுதல் ஈவுத்தொகையை பெறும் அரசின் கோரிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கு ரிசர்வ் வங்கி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்று அவர் கூறியுள்ளார். இது வெளிப்படையாக ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகளுக்கு வழிவகுத்தது. இதை தொடர்ந்து, ஆச்சார்யா தனது பதவியை ஆறு மாதங்களுக்கு முன்பு ராஜினாமா செய்தார்.
The post 2019 தேர்தலுக்கு முன்பு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3 லட்சம் கோடி பெற ஒன்றிய அரசு முயற்சி: முன்னாள் துணை கவர்னர் விரால் ஆச்சார்யா தகவல் appeared first on Dinakaran.