இதுகுறித்து சேலத்தை சேர்ந்த தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 500 முதல் 600 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் தேங்காயை ஆத்தூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூரை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். கடந்தாண்டு பெய்த தொடர் மழை காரணமாக தேங்காய் விளைச்சல் அதிகரித்தது. இதனால் விலை சரிந்து காணப்பட்டது. கடந்த ஆடி மாதத்தில் வரலாறு காணாத அளவில் டன் ₹19 ஆயிரமாக சரிந்தது. பின்னர், வரத்து குறைவால் விலை அதிகரித்து கடந்த வாரம் டன் ரூ21 ஆயிரத்திற்கு விற்கப்பட்டது.
நடப்பு ஆவணி மாதத்தில் முகூர்த்தங்கள், கோயில் திருவிழாக்களால் தேங்காய் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கடந்த வாரத்தை காட்டிலும் நடப்பு வாரத்தில் தேங்காய் விலை அதிகரித்துள்ளது. நடப்பு வாரத்தில் டன்னுக்கு ₹3 ஆயிரம் அதிகரித்து, இன்று காலை நிலவரப்படி டன் ₹24 ஆயிரத்திற்கு விற்கப் படுகிறது. சில்லரையில் ஒரு தேங்காய் ரூ8 முதல் ரூ20 வரை விற்பனை செய்யப்படுகிது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.
The post வரத்து குறைவால் விலை உயர்வு: தேங்காய் டன்னுக்கு ரூ3 ஆயிரம் அதிகரிப்பு appeared first on Dinakaran.