சூதாட்ட செயலி தொடர்பாக காவல் துறை அதிகாரி சந்திரபூஷன் வர்மா, ஹவாலா தரகர்கள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த செயலியை உருவாக்கிய சவுரப் மற்றும் ரவி உப்பல் ஆகியோர் துபாயில் இருந்து செயல்படுகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் வினோத் வர்மா நேற்று டிவிட்டரில் பதிவிடுகையில், என்னுடைய இரண்டு மகன்கள், மைத்துனர் ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவர்கள் நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார்கள். நாளை(இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு எனது மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசின் அமைப்புகள் ஆட்சியில் இருப்பவர்களின் உத்தரவுப்படி என்னவேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், முதல்வர் பூபேஷ் பாகேல் மற்றும் அவரது குழுவின் மன வலிமையை யாரும் தகர்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
The post சட்டீஸ்கர் முதல்வரின் ஆலோசகர் மகன்களிடம் அமலாக்கத்துறை விசாரணை appeared first on Dinakaran.