தாய்மாமனை சரமாரி வெட்டிய வாலிபர் கைது செய்யாறு அருகே பரபரப்பு மது குடிக்க பணம் தர மறுத்ததால்

செய்யாறு, செப்.6: செய்யாறு அருகே மது குடிக்க பணம் தர மறுத்ததால் தாய்மாமனை சரமாரியாக வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் தாலுகா, அரசாணிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(48), விவசாயி. இவரது தங்கை மகன் சரத்குமார்(33). நேற்று முன்தினம் சரத்குமார் தனது தாய்மாமன் ராஜேந்திரனிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால், ராஜேந்திரன் பணம் இல்லை என கூறிவிட்டாராம். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சரத்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேந்திரனை சரமாரியாக வெட்டியதுடன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், இதுகுறித்து ராஜேந்திரன் தூசி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு வழக்கு பதிந்து சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். மது குடிக்க பணம் தர மறுத்த ஆத்திரத்தில் தாய்மாமனை கத்தியால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தாய்மாமனை சரமாரி வெட்டிய வாலிபர் கைது செய்யாறு அருகே பரபரப்பு மது குடிக்க பணம் தர மறுத்ததால் appeared first on Dinakaran.

Related Stories: