பலர் கால்வாயில் விழுந்துவிடுவோமோ என்ற அச்சத்தில் சென்று வருகின்றனர். யாருக்காவது உடல்நிலை சரியில்லை என்றால் பலகையில் நடக்கும் போது நடுக்கம் ஏற்படுகிறது. ஒரு சில நேரத்தில் மரப்பலகையில் இருந்து கீழே விழும் சூழ்நிலையும் உள்ளது. தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று நோய் பரவக்கூடிய அபாயமும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாய் பணியை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், உடனடியாக மாவட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலர் விரைந்து பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காலதாமதம் ஏற்படுத்தும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post வெள்ளானூர் ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்ட மழைநீர் கால்வாய் பணி appeared first on Dinakaran.