இந்நிலையில் நாளை மறுநாள் அமெரிக்க அதிபர் ஜோ பிடனும், அவரது மனைவி ஜில் பிடனும் இந்தியா வரவிருந்த நிலையில், திடீர் மாற்றங்கள் நடந்துள்ளன. அதிபருக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டதில், அதிபருக்கு நெகடிவாகவும், அவரது மனைவிக்கு பாசிடிவ் ரிசல்ட்டும் வந்துள்ளது. இருப்பினும், அவருக்கு கோவிட் அறிகுறிகள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. டெலாவேரில் உள்ள அவரது இல்லத்தில் ஜில் பிடன் தனிமைப்படுத்தலில் இருந்ததாகவும், அதன்பிறகு மருத்துவர்களின் ஆலோசனைபடி அதிபரை சந்தித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருந்தும் அதிபர் ஜோ பிடனுடன் ஜில் பிடன் இந்தியா வருவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post நாளை மறுநாள் இந்தியா வரும் நிலையில் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடனுக்கு கொரோனா : பயண திட்டத்தில் மாற்றம் ஏற்படுகிறதா? appeared first on Dinakaran.