கடந்த 1999-ம் ஆண்டு நவம்பர் முதல் 2002-ம் ஆண்டு வரை ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்துள்ளார். நாட்டின் உயரிய பத்ம பூஷண் விருது பெற்றவர். இவர் தனது முதல் மனைவி மீனாட்சியை கடந்த 2020ம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு சாக்ஷி, சானியா என இரு மகள்கள் உள்ளனர். இதையடுத்து, கரோலின் ப்ரோசார்ட் என்பவரை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இவர் லண்டனில் நேற்று நடந்த தனிப்பட்ட திருமண விழாவில் டிரினா என்ற பெண்ணை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அவருக்கு மிகவும் நெருங்கிய தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, அவரது மனைவி நீட்டா அம்பானி, லட்சுமி மிட்டல், சுனில் மிட்டல், பிரகாஷ் லோகியா, எஸ்என் லோகியா, முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி, அவருடைய காதலி மற்றும் மாடல் அழகியான உஜ்வாலா ராவத் மற்றும் கோபிசந்த் இந்துஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post 68 வயசிலும் ஆசை வரும்… முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே 3வது திருமணம் appeared first on Dinakaran.