I.N.D.I.A. கூட்டணியின் மும்பை கூட்டம் வெற்றி அடைந்துள்ளதால் அதை திசை திருப்பவே பாஜகவினர் இது போன்ற பொய்களை பரப்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். மேலும் பேசிய அவர், “சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்பது சமூகத்தில் எதுவுமே மாறாமல் எல்லாமே அப்படியே இருக்க வேண்டும் அதுவும் நிரந்தரமாக என வலியுறுத்துகிறது. மாறாக திராவிட மாடல் மாற்றத்தையும், சமூக சமத்துவத்தை வளர்க்கிறது. நான் சனாதன தர்மத்தைத் தான் எதிர்த்தேன். அதை ஒழிக்க வேண்டும் என்றுதான் கூறினேன். பாஜக எனது கருத்தைத் திரித்து போலி செய்திகளைப் பரப்புகிறது. அவர்கள் என்ன மாதிரியான வழக்குகள் தொடுத்தாலும் நான் அத்தனையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன்,”என்றார்.
The post சனாதனத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்தப் போவதில்லை :அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!! appeared first on Dinakaran.