மேலும் 14 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.கிர்குக் நகரில் இந்த மோதலுக்கு அங்குள்ள ஒரு கட்டிடமே காரணமாக மாறியுள்ளது. இந்த கட்டிடம் 6 ஆண்டுகளுக்கு முன்பு குர்த்திஸ்தான் ஜனநாயக கட்சியின் தலைமை அலுவலகமாக செயல்பட்டு வந்தது. பின்னர் அந்த கட்டிடத்தை ராணுவம் கைப்பற்றி பயன்படுத்தி வருகிறது. இதனை நல்லெண்ண அடிப்படையில் அந்த கட்சியிடமே வழங்க அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இதற்கு அங்குள்ள அரபு மற்றும் துருக்கி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்த நிலையில் பதற்றத்தை கட்டுப்படுத்த நகரம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
The post ஈராக்கின் கிர்குக் நகரில் 2 இனக்குழுக்கள் பயங்கர மோதல் :போலீசார் துப்பாக்கிச் சூடு; 3 பேர் மரணம்; ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!! appeared first on Dinakaran.