தரகம்பட்டி அருகே மது விற்றவர் கைது

தோகைமலை,செப்.4: கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே தேவர்மலை ஊராட்சி மம்பத்தையூர் கருப்பன் மகன் ரவி (48). இவர் மம்மத்தையூரில் நடத்தி வரும் பெட்டிக்கடையில் மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் அந்த பகுதியை ஆய்வு செய்தனர். அப்போது ரவி விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

The post தரகம்பட்டி அருகே மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: