4,000 கிலோ மீட்டர் தூரம் பயணம் சென்ற ராகுல் காந்தி பல்வேறு தரப்பு மக்களை சந்தித்து உரையாடினார். ராகுலின் இந்திய ஒற்றுமை நடை பயணம் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அறுதி பெரும்பான்மை வெற்றிக்கு வழி வகுத்தது. இந்நிலையில் இந்திய ஒற்றுமை நடை பயணம் தொடங்கி வரும் 7ம் தேதியுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதனை நினைவு கூரும் வகையிலும், விரைவில் நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை, மக்களவை தேர்தல்களில் வெற்றி பெறவும் மாவட்ட அளவிலான ஒற்றுமை நடை பயணத்தை மேற்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
The post இந்திய ஒற்றுமை நடை பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவு: மாவட்ட அளவில் யாத்திரைகளை நடத்த காங். திட்டம் appeared first on Dinakaran.
